காதல் திருமணம் செய்த பெண்ணை எரித்துக்கொன்ற 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சீதா என்ற பெண்ணை கொலை செய்து உடலையும் எரித்தனர்.
இந்த கொலை தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன், கணவரின் தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
கடலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
