காங்கிரஸ் புதிய தலைவர் செல்வ பெருந்தகை, முதல் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைவராக செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார்.
இந்த பொறுப்புக்கு பல்வேறு கோஷ்டிகளின் சார்பில் போட்டி கடுமையாக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் செல்வ பெருந்தகையை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
இதை தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர்களை செல்வ பெருந்தகை சந்தித்தார். பின்னர் இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார், அப்போது அவருக்கு ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
செல்வபெருந்தகை சட்டசபை காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வந்தார். காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பொறுப்புக்கு எஸ்.ராஜேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் உடன் வந்து மு,க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
