• June 6, 2025

Month: February 2024

செய்திகள்

47-ம் ஆண்டு நினைவு நாள்: ஈ.வி.கே.சம்பத் உருவப்படத்துக்கு மரியாதை

ஈ.வி.கே.சம்பத் 47-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். துணைத் தலைவர்கள் நாசே ஜெ.ராமசந்திரன், சொர்ணா சேதுராமன், எஸ்.எம்.இதயத்துல்லா, விஜயன் மற்றும் சுமதி அன்பரசு, கவுன்சிலர் அமிர்தவர்ஷினி, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கடும் பனிப்பொழிவு

கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனிபொழிவு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் கடும் பனிப்பொழிவு இருந்தது. கோவில்பட்டி மட்டுமின்றி சுற்றப்புற கிராமங்களிலும் இந்த நிலை நீடித்தது, காலை 7.30 மணி வரை  பனிபொழிவு இருந்தது. இதனால் சாலையில் வந்த வாகனங்கள் தெரியவில்லை. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர்,

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்; பிரதமர் மோடி 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம்அமைக்கும் பணிகளை வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதேபோல் ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவேகட்டப்பட்ட புதிய ரெயில்வே தூக்கு மேம்பாலத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.மிகப்பெரிய 2 திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதையொட்டி தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு குழுவினர் பிரதமர் வரும் ஹெலிபேட் தளங்களை  சோதனை நடத்த உள்ளனர். கடலோர காவல்படை, மத்திய […]

கோவில்பட்டி

மகளிர் சுயஉதவி குழுவினருக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி 

கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கை வேளாண்மை நண்பர்களுக்கான பயிற்சி, கயத்தாறு வட்டார மகளிர் சுய உதவிக் குழுவினர்  30 பேருக்கு நடைப்பெற்றது. இன்று முதல் 5 நாட்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியை கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் தேரடி மணி தொடக்கி வைத்து உரையாற்றி சிறப்பித்தார்.  பனை மற்றும் வாழை ஆராய்ச்சி நிலைய தனி அதிகாரி முனைவர் வர்ணப்பிரியா வாழ்த்துரை வழங்கினார். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் காளிராஜன்  […]

கோவில்பட்டி

திமுக அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம்;  முடுக்கு மீண்டான் பட்டியில் நடந்தது 

கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கு மீண்டான்பட்டி கிராமத்தில் மேற்கு ஒன்றிய திமுக மகளிர் அணி சார்பில் திமுக ஆட்சியின் மூன்றாண்டு கால சாதனை விளக்க மற்றும் பாராளுமன்ற தேர்தல் தெருமுனை பிரசார கூட்டம் ஒன்றிய செயலாளர் கி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சரத் பாலா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக அரசின் மூன்றாண்டு கால சாதனையை விளக்கி பேசினர்.  நிகழ்ச்சியில் ஊராட்சி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே நிலக்கரி ஏற்றி வந்த லாரி தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்தது;

தூத்துக்குடியில் இருந்து சிவகாசி பேப்பர் மில்லுக்கு நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி  நேற்று இரவு புறப்பட்டு சென்றது. லாரியை எப்போதும் வென்றான் அருகேயுள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கற்பகராஜா (வயது 30)என்பவர் ஓட்டினார். கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் பகுதியில் இன்று அதிகாலை  2.25 மணிக்கு லாரி வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் வேகமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் […]

செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பிறகு திமுக இருக்காது ; டி.ஜெயக்குமார்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது.  விருப்ப மனுக்கள் பெற்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியதாவது :- அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்க்கான விருப்ப மனுவை பெறுவதற்காக முதல் நாளே எழுச்சியோடு வந்திருக்கும் இந்த நிகழ்வை பார்க்கும் போதும், கள அளவில் அதிமுக தோழர்களின் எழுச்சியை பார்க்கும் போதும், பொது மக்களுக்கு இந்த ஆட்சியின் மீது அதிருப்தி இருப்பதாலும்,அதிமுக தலைமையிலான கூட்டணி […]

செய்திகள்

தமிழ்நாடு சட்டசபையில் தாய் மொழி தின உறுதிமொழி ஏற்பு

தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகத் தாய்மொழி நாளையொட்டி சட்டமன்றப் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் இன்று தமிழ்நாடுசட்டசபையில் , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,கூறி இருப்பதாவது:-  “அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை […]

செய்திகள்

தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்; கமல்ஹாசன் பேட்டி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-நான் முழு நேர அரசியல்வாதி அல்ல என்ற விமர்சனத்தை முன் வைக்கின்றனர். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை. முழு நேர குடிமகனாக இருந்து ஓட்டுப்போடாதவர்கள்தான் என்னை கேள்வி கேட்கின்றனர். கோவை தெற்கு தொகுதியில் 90 ஆயிரம் பேர் ஓட்டு போடவில்லை. அவர்கள்தான் நான் தோல்வியடைய காரணம். நாட்டில் 40 சதவீதம் […]

செய்திகள்

சதுரகிரியில் மாசி பவுர்ணமி வழிபாடு; இன்று  முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 21) முதல் 24 முடிய 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இக்கோயிலில் இன்று  மாசி மாத பிரதோஷம்,. 24ல் பவுர்ணமி வழிபாடும் நடக்க உள்ளது.  இதனை முன்னிட்டு 24 வரை தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் […]