கோவில்பட்டியில் கடும் பனிப்பொழிவு

கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனிபொழிவு அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் கடும் பனிப்பொழிவு இருந்தது.
கோவில்பட்டி மட்டுமின்றி சுற்றப்புற கிராமங்களிலும் இந்த நிலை நீடித்தது, காலை 7.30 மணி வரை பனிபொழிவு இருந்தது. இதனால் சாலையில் வந்த வாகனங்கள் தெரியவில்லை. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர்,

