திமுக அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம்; முடுக்கு மீண்டான் பட்டியில் நடந்தது

கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கு மீண்டான்பட்டி கிராமத்தில் மேற்கு ஒன்றிய திமுக மகளிர் அணி சார்பில் திமுக ஆட்சியின் மூன்றாண்டு கால சாதனை விளக்க மற்றும் பாராளுமன்ற தேர்தல் தெருமுனை பிரசார கூட்டம் ஒன்றிய செயலாளர் கி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சரத் பாலா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு திமுக அரசின் மூன்றாண்டு கால சாதனையை விளக்கி பேசினர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் விஜயலட்சுமி,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் கி தாமோதரகண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கிளைச் செயலாளர் கே பரமேஸ்வரிநன்றி கூறினார்.
