• June 7, 2025

சதுரகிரியில் மாசி பவுர்ணமி வழிபாடு; இன்று  முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

 சதுரகிரியில் மாசி பவுர்ணமி வழிபாடு; இன்று  முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 21) முதல் 24 முடிய 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இக்கோயிலில் இன்று  மாசி மாத பிரதோஷம்,. 24ல் பவுர்ணமி வழிபாடும் நடக்க உள்ளது.  இதனை முன்னிட்டு 24 வரை தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

 எதிர்பாராத விதமாக கனமழை பெய்தால் மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவது நிறுத்தி வைக்கப்படும் என்று  வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 தற்போது மலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் நிலையில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டுமென வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *