நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஒட்டி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் 2 கட்சிகளுக்கு இன்று தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் தலைவர்கள் கையெழுத்திட்டனர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில்,மாசி மாத பவுர்ணமி அன்னாபிஷேகம் விழா இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி தீபாராதனை,அபிஷேகம், அலங்காரம்,அன்னாபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது, இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்
கோவில்பட்டி தாசில்தாராக இருந்த லெனின் தூத்துக்குடி சிப்காட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு புதிய தாசில்தாராக சரவணப்பெருமாள் நியமிக்கப்பட்டார். புதிய தாசில்தார் சரவணப்பெருமாள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தாசில்தார் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம் எல் ஏ விஜயதாரணி. காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தியான விஜயதாரணி 1987 இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது சட்டசபை காங்கிரஸ் கட்சி கொறடாவாக உள்ளார். இந்நிலையில் தேசிய அரசியலில் ஈடுபட்ட விருப்பம் கொண்ட விஜயதாரணி, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் விஜய […]
பாலித்தீன் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய விளைவுகள் , பாதிப்புகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும், மஞ்சப்பை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் உள்ள எஸ்.ஆர்.எம்.எஸ். பள்ளியில் “ பாலித்தீன் பையை ஒழிப்போம் மஞ்சப்பையை காப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு யோகாசன நிகழ்ச்சியை கோவில்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ராஜ்குமார் பள்ளி மேலாண்மை இயக்குனர் திருக்குமரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். […]
கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் இருந்த ஹவுசிங் போர்டு வீடுகள் சேதமடைந்த காரணத்தினால் அந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டு தற்போது அந்த இடம் காலியிடமாக உள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் தமிழக அரசு மருத்துவமனையில் பயன்படுத்தக் கூடிய அயர்ன் அண்ட் போலிக் ஆசிட் சிரப் மருந்து பாட்டில்கள் குவிந்து கிடப்பது மட்டுமின்றி, காலியிடத்தின் பாதை முழுவதும் அந்த மருத்து பாட்டில்கள் வீசி செல்லப்பட்டுள்ளன. அயர்ன் அண்ட் போலிக் ஆசிட் சிரப் என்பது கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்பு சத்தினை […]
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகேயுள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மாநில மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, […]
நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக சார்பில் அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கலந்து கொண்டனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெயக்குமார் கூறியதாவது :- இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தரப்பில் பங்கேற்று எழுத்துப்பூர்வமான கடிதத்தை கொடுத்து உள்ளோம் என்றார். தேர்தல், நியாயமாகவும் ஜனநாயக முறையிலும் […]
ஊரக திறனாய்வு த தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 9ம் வகுப்பு மாணவி எஸ்.கே.நிலா, மாணவர்கள் அருண்குமார், சரண், கிருத்திக் ஆகியோர் வெற்றி பெற்று பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 4 மாணவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் கலவி உதவித்தொகை வழங்கப்படுகிறது. வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி கொடுத்த ஆசிரியர்களையும், பள்ளியில் நடந்த விழாவின் ப பொது பள்ளி தலைவர் பழனிசெல்வம், செயலாளர் […]
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியரும்,கோவில்பட்டி பசுமை இயக்கத்தின் தலைவருமான ஜெகஜோதி எழுதிய இயற்கை என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூ,30ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. இயற்கை நூலாசிரியர் ஜெகஜோதிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரோட்டரி பசுமை விருது வழங்கப்பட்டது. கோவில்பட்டியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்துசெல்வன், சாலை பாதுகாப்பு […]