• June 7, 2025

கோவில்பட்டியில் காலி இடத்தில் குவிந்து கிடந்த மருந்து பாட்டில்கள் 

 கோவில்பட்டியில் காலி இடத்தில் குவிந்து கிடந்த மருந்து பாட்டில்கள் 

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் இருந்த ஹவுசிங் போர்டு வீடுகள் சேதமடைந்த காரணத்தினால் அந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டு தற்போது அந்த இடம் காலியிடமாக உள்ளது.

இந்நிலையில் அந்த இடத்தில் தமிழக அரசு மருத்துவமனையில் பயன்படுத்தக் கூடிய அயர்ன் அண்ட் போலிக் ஆசிட் சிரப் மருந்து பாட்டில்கள் குவிந்து கிடப்பது மட்டுமின்றி, காலியிடத்தின் பாதை முழுவதும் அந்த மருத்து பாட்டில்கள் வீசி செல்லப்பட்டுள்ளன. 

அயர்ன் அண்ட் போலிக் ஆசிட் சிரப் என்பது கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்பு சத்தினை அதிகரிக்கவும், ரத்த சோகை தாக்குதலை கட்டுப்படுத்துவும் கொடுக்க கூடிய மருந்து என்று கூறுப்படுகிறது. மருந்து பாட்டில்கள் குவியலுடன் இனி இல்லை, ரத்த சோகை என்ற பெயரிலான ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் கிடந்தன. 

இதில் உள்ள மருந்து பாட்டிகள் அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலவாதியானதாக உள்ளது. மருந்துகள் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு என்று பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு வகுத்துள்ள நிலையில், அரசு வழங்க கூடிய மருந்துகளை அந்த வழிகாட்டல் முறையில் அப்புறப்படுத்தமால் இப்படி காலியிடத்தில் அதுவும், அதிகமாக பள்ளி குழந்தைகள், பொது மக்கள் செல்லக்கூடிய பகுதியில் தமிழக அரசின் மருந்து பாட்டில்கள் வீசி செல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *