• June 7, 2025

Month: December 2023

கோவில்பட்டி

சுத்தமான குடிநீர் வழங்க கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை; பா.ஜ.க.வினர் போராட்டம்  

கோவில்பட்டி நகராட்சியில் வழங்கப்பட்டு  வரும் சுகாதாரமற்ற முறையில், உப்பு நீர் கலந்து வரும் சீவலப்பேரி குடிநீரை தடுக்க கோரியும், சுத்தமான குடிநீர் வழங்கிட கோரியும் நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில்  நகர  பா.ஜனதா பொதுச்செயலாளர் அழகுமாரியப்பன், நகர பொருளாளர் பாலமுருகன், அரசு தொடர்பு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், பிரசார பிரிவு தலைவர் லட்சுமணக்குமார், முன்னாள் ரானுவத்தினர் பிரிவு தலைவர் சுந்தர்ராஜன், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஜே.சி.ஐ. புதிய தலைவர் ஆர்.எஸ்.வெங்கடேஷ் ; 20-ந் தேதி பதவி ஏற்பு

ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) என்பது 115 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள அமைப்பாகும். செயலில் உள்ள உறுப்பினர்கள் சுமார்  5 லட்சம் பேர் மற்றும் மில்லியன் கணக்கான முன்னாள் மாணவர்களை கொண்ட உலகளாவிய இளம் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் கூட்டமைப்பு ஆகும். இந்த கூட்டமைப்பில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் உறுப்பினராக இருக்கலாம். தற்போது கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவராக டி.தீபன்ராஜ் பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த […]

கோவில்பட்டி

சர்வதேச உரிமை கழக செயல் அலுவலகம் திறப்பு விழா

கோவில்பட்டி புதுகிராமத்தில் அமைந்துள்ள சாய் விஷ்ணு திருமண மஹாலில் சர்வதேச உரிமை கழக செயல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. முதன்மை செயலாளர் ஜான் பெஸ்லி தலைமை தாங்கினார். துணை தலைவர் காளிராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்  கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளரும் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினருமான  எம்.ஆர்.வி.கவியரசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஜி.எம்.சங்கர்கணேஷ், […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கேட்ட வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட்டால் விவாதத்திற்கு நாங்கள் தயார்; 

சென்னை திரு வி. க. நகர் பகுதியில் மழை வெள்ள பகுதிகளை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று நேரில் பார்வையிட்டார்.  பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் டி. ஜெயக்குமார் கூறியதாவது :- புயல் பாதிப்பு மற்றும் இயற்கை இடர்பாடுகள் வரும்போது மத்திய குழு வருவது என்பது வாடிக்கையான ஒன்று. இந்த புயலால் பாதிக்கப்பட்டது அனைத்து தரப்பு மக்களும்தான். சென்னையை சுற்றியுள்ள விவசாயிகள்,மீனவர்கள்,ஏழை எளிய நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படையும் வகையில் இந்த புயல் […]

கோவில்பட்டி

தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் ரூ 1.20 லட்சம் நிவாரண நிதி ; கலெக்டரிடம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ. லட்சுமிபதியை தென் இந்திய தீப்பெட்டி உட்பத்தியாளர் சங்கத்தினர் இன்று தூத்துக்குடியில் சந்தித்தனர்.  அப்போது முதல் அமைச்சர் நிவாரணம் நிதிக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மற்றும் காமரின் மேட்ச் குரூப் சார்பில் ரூ.20 ஆயிரம் நிதி அளிக்கப்பட்டது.  இதுற்கான காசோலைகளை சங்க தலைவர் விஜய் ஆனந்த், செயலாளர் தேவதாஸ், பொருளாளர் ராஜவேல் ஆகியோர் வழங்கினார்கள். நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம், தொடிசியா தலைவர் நேரு பிரகாஷ் […]

செய்திகள்

தே.மு.தி.க.செயற்குழு, பொதுக்குழு 14-ந் தேதி கூடுகிறது; முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன

தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 14.12.2023 வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். மேலும் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார். இக்கூட்டத்தில் தலைமை கழக […]

கோவில்பட்டி

142-வது பிறந்த நாள்: பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபம் மற்றும் பாரதியர் இல்லம் ஆகிய இடங்களில் அவரது திருவுருவ சிலைக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.G.V.மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கோ..லட்சுமிபதி ஆகியோர் இன்று  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா, பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் நவநீத கண்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி,  […]

கோவில்பட்டி

காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட மக்காச்சோள பயிர்கள்; ஜி.வி.மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ,மேலநம்பிபுரம், முத்துலாபுரம், அயன்ராசாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றி, மான்கள் மற்றும் படைப்புழுக்களால் மக்காச்சோள பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளான,  இந்த பயிர்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி..மார்கண்டேயன் அதிகாரிகளுடன்  இன்று காலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இனி வரும் காலங்களில் இவற்றை தடுக்கும் வகையில் உரிய  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று  விவசாயிகளிடம் உறுதியளித்தார். எம்.எல்.ஏ.மார்க்கண்டேயனுடன்   தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் .விஜயாராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி, […]

கோவில்பட்டி

மாற்றுத் திறனாளிகளுக்கான, இல்லம் தேடி சமூக தரவுகள் பதிவு பிரசாரம்

தூத்துக்குடி  மாவட்ட ஆட்சிஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் தேடி சமூக தரவுகள் பதிவு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்ம நாயகம் ஆலோசனையின் பேரில் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கு பிரசார வாகனம் சென்ற நிலையில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் வந்தது.  ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன் ராஜா வாகனத்தை வரவேற்று மக்கள் எழுச்சி கலை குழுவினருடன் கரகாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சியுடன் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கூட்டுறவு வங்கியில் நிதிமுறைகேடு பற்றி விசாரணை நடத்தகோரி ஆட்சியரிடம் பா.ஜ.க. நிர்வாகிகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதியை  பாரதிய ஜனதா கட்சி வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர், அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி புதுரோட்டில் செயல்பட்டு வரும் ஏ393 கோவில்பட்டி கூட்டுறவு நகர வங்கி லிட், வங்கியில் பொதுமக்களின் பணத்தை நிதிமுறைகேடு செய்துள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலகோடி ரூபாய் நிதிமுறைகேடு நடைபெற்றுள்ள நிலையில் நிதிமுறைகேட்டில் ஈடுபட்ட எந்த அரசு அலுவலரும் பணியிடை மாற்றமோ, அல்லது துறை […]