• June 8, 2025

காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட மக்காச்சோள பயிர்கள்; ஜி.வி.மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

 காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட மக்காச்சோள பயிர்கள்; ஜி.வி.மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ,மேலநம்பிபுரம், முத்துலாபுரம், அயன்ராசாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் காட்டுப்பன்றி, மான்கள் மற்றும் படைப்புழுக்களால் மக்காச்சோள பயிர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளான, 

இந்த பயிர்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி..மார்கண்டேயன் அதிகாரிகளுடன்  இன்று காலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இனி வரும் காலங்களில் இவற்றை தடுக்கும் வகையில் உரிய  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று  விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

எம்.எல்.ஏ.மார்க்கண்டேயனுடன்   தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் .விஜயாராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி, வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் .பாலசுப்பிரமணியன் தோட்டக்கலை துணை இயக்குனர் .சுந்தர்ராஜன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் கண்ணண்(தரக் கட்டுப்பாடு), கலைச்செல் வி(பயிர் காப்பீடு) புதூர் வேளாண்மை உதவி இயக்குனர் சின்னக்கண்ணு விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் சுந்தரி, வட்டார புள்ளியியல் ஆய்வாளர் .அகிலா வனச்சரக அலுவலர் .கவின்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் .நாகராஜ், பாண்டியராஜ்,.கேசவன்,.பிரசன்னா,.பாலகுமார் வனக்காவலர்கள் திரு.ராமசாமி, திரு.ஜெயபாலமுருகன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் விவசாயிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *