142-வது பிறந்த நாள்: பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபம் மற்றும் பாரதியர் இல்லம் ஆகிய இடங்களில் அவரது திருவுருவ சிலைக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.G.V.மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கோ..லட்சுமிபதி ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா, பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் நவநீத கண்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் மேற்கு செயலாளர் அன்புராஜன், எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
