• June 8, 2025

கோவில்பட்டி ஜே.சி.ஐ. புதிய தலைவர் ஆர்.எஸ்.வெங்கடேஷ் ; 20-ந் தேதி பதவி ஏற்பு விழா

 கோவில்பட்டி ஜே.சி.ஐ. புதிய தலைவர் ஆர்.எஸ்.வெங்கடேஷ் ; 20-ந் தேதி பதவி ஏற்பு விழா

ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (JCI) என்பது 115 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள அமைப்பாகும்.

செயலில் உள்ள உறுப்பினர்கள் சுமார்  5 லட்சம் பேர் மற்றும் மில்லியன் கணக்கான முன்னாள் மாணவர்களை கொண்ட உலகளாவிய இளம் தலைவர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் கூட்டமைப்பு ஆகும்.

இந்த கூட்டமைப்பில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் உறுப்பினராக இருக்கலாம். தற்போது கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவராக டி.தீபன்ராஜ் பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வர இருக்கும் 2024 ம் ஆண்டுக்கான ஜே.சி.ஐ.புதிய தலைவராக ஆர்.எஸ்.வெங்கடேஷ் நியமனம் செய்யபபட்டுள்ளார்.

பி.ஏ.பி.எல். பட்டதாரியான ஆர்.எஸ்.வெங்கடேஷ் ஜே.சி.ஐ.அமைப்பில் நீண்டகால உறுப்பினர் ஆவார். 2019 ம் ஆண்டு ஜே.சி.ஐ. தலைவராக லட்சுமி விக்னேஷ் இருந்த போது செயலாளராக ஆர்.எஸ்.வெங்கடேஷ் பணியாற்றினார்.

ஆர்.எஸ்.வெங்கடேசின் தந்தை பி.ராஜேஷ் சரவணன். இவர் வக்கீல் தொழில் செய்து வருகிறார். 2004ம் ஆண்டு கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவராக இவர் பணியாற்றினார். 20 ஆண்டுகளுக்கு பிறகு தந்தை வகித்த பதவியில் ஆர்.எஸ்.வெங்கடேஷ் அமர இருக்கிறார்.

20-ந் தேதி பதவி ஏற்பு விழா

புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு கோவில்பட்டி ஜேசி.பவன் அரங்கத்தில் நடக்கிறது. இது ஜே.சி.ஐ.யின் 29-வது நிறுவதல் விழாவாகும்.

சிறப்பு விருந்தினராக ஜே.சி.ஐ. உடனடி தேசிய தலைவர் ஆர்.ராஜா கோவிந்தசாமி, கவுரவ விருந்தினராக 18-வது மண்டல புதிய தலைவர் கே.எஸ்.ஷிபி, துணை தலைவர் டாக்டர் ஏ.கே.கார்த்திக், சிறப்பு அழைப்பாளராக உடனடி மண்டல தலைவர் எஸ்.பி.ராஜலிங்கம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

கோவில்பட்டி ஜே.சி.ஐ.2023 தலைவர் டி,தீபன்ராஜ், செயலாளர் ஆர்,சூர்யா மற்றும் திட்ட இயக்குனர் எல்.ரத்தினகுமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.

2024 கோவில்பட்டி ஜே.சி.ஐ.தலைவர் ஆர்.எஸ்.வெங்கடேஷ் பதவி ஏற்பின் போது அவரிடம் உடனடி தலைவர் டி.தீபன்ராஜ் பொறுப்புகளை ஒப்படைத்து, உறுதிமொழி ஏற்க செய்து  பதவி பிரமாணம் செய்து வைப்பார். மேலும் தலைவர் கழுத்தில் அணியக்கூடிய பட்டயம் (தேசிய காலர்) கூட்டம் நடத்தும் போது பயன்படுத்தும் சுத்தியல் ஆகியவற்றை வழங்குவார்.

ஆர்.எஸ்.வெங்கடேஷ் தலைவர் பதவி ஏற்றதும், செயலாளராக ஐ..அருண்பிரசாத், பொருளாளராக கே.எஸ்.சுரேந்தர், இணை செயலாளராக எஸ்.அகிலேஷ், இணை பொருளாளராக என்.ரகுபதி, துணை தலைவர்களாக  ஆர்.சூர்யா, எஸ்.மனோஜ்கண்ணா, எஸ்.ஆனந்த், டி.ஸ்டீபன் நரேஷ், ராஜதுரை,  பி.ஷியாம் சுந்தர் ஆகியோர் உறுதிமொழி கூறி பதவி ஏற்கிறார்கள்.

இவர்களை தொடர்ந்து இயக்குனர்களாக எஸ்.விஜய் ஆனந்த், எஸ்.வர்ஷன், எஸ்.சிவ ஹர்ஷன், ஜே.தினேஷ் பாபு, வி.ஆர்.ராஜரத்தினம், கே,கருகுவேல் நிவாஸ், வி.உதயலட்சுமி,ஆர்.ஜென்சி ஆனந்தம், எம்.செல்வலட்சுமி, எஸ்.விகாஷ், எஸ்.லோகேஸ்வர் ஆகியோர் உறுதிமொழி கூறி  பதவி ஏற்கிறார்கள்.

ஜூனியர் ஜேசி ஒருங்கிணைப்பாளர்களாக ஏ.கண்ணப்பன், ஜி.மணிகண்டமூர்த்தி, குழு ஆலோசகர்களாக பி.பி.பி.ராஜ்குமார், ஆர்.தயாள்சங்கர், ரத்ததானம் ஒருங்கிணைப்பாளராக பி.பிரவின்குமார் ஆகியோர் செயல்படுவார்கள்.

சுய முன்னேற்றம்

புதிய தலைவராக பதவி ஏற்க இருக்கும் ஆர்.எஸ்.வெங்கடேஷ் கூறியதாவது:-

ஜே.சி.ஐ., இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் அமைப்பு. ஒவ்வொருவரும் சுய முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்காக இந்த அமைப்பு பாடுபடுகிறது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஜே.சி.ஐ.சார்பில் பயிற்சி அளித்து அவர்கள் முன்னேற்றத்துக்கு துணை நிற்போம்.

ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்வோம். ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு அன்னதானம் செய்வது மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற சமூக சேவையிலும் எங்கள் அமைப்பு ஈடுபடும்,.

இவ்வாறு ஆர்.எஸ்.வெங்கடேஷ் கூறினார்.

SKTS.திருப்பதிராஜன்-

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *