சுத்தமான குடிநீர் வழங்க கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை; பா.ஜ.க.வினர் போராட்டம்

கோவில்பட்டி நகராட்சியில் வழங்கப்பட்டு வரும் சுகாதாரமற்ற முறையில், உப்பு நீர் கலந்து வரும் சீவலப்பேரி குடிநீரை தடுக்க கோரியும், சுத்தமான குடிநீர் வழங்கிட கோரியும் நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் நகர பா.ஜனதா பொதுச்செயலாளர் அழகுமாரியப்பன், நகர பொருளாளர் பாலமுருகன், அரசு தொடர்பு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், பிரசார பிரிவு தலைவர் லட்சுமணக்குமார், முன்னாள் ரானுவத்தினர் பிரிவு தலைவர் சுந்தர்ராஜன், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பழனிமாரியப்பன், ஓபிசி அணி தலைவர் வெங்கடேசன், பொருளாளர் மாரியப்பன், பொதுச்செயலாளர் கண்ணன், வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் நீதிப்பாண்ட்டியன் மற்றும் நிர்வாகிகள் மாரிச்சாமி, உத்தண்டுராமன், செல்வம், கொம்பையா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் கணபதி, பேச்சியப்பன், வேல்முருகன், குருசாமி, ராஜன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அவர்களுடன் நகராட்சி ஆணையாளர் பேச்சு நடத்தினார். விரைவில் இந்த பிரச்சினை சரி செய்யப்படும் என்று உறுதிமொழி அளித்ததன் பேரில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
இந்த தகவலை பா.ஜனதா மாவட்ட பொதுசெயலாளர் வீ.வேல்ராஜா தெரிவித்து உள்ளார்.
