• June 8, 2025

கோவில்பட்டி அஞ்சலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

 கோவில்பட்டி அஞ்சலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர்  இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.

கோவில்பட்டி  கோட்டத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி ஆகிய தலைமை அஞ்சலகங்களில் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

அஞ்சலக ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை மற்றும் ஓய்வூதியம் உள்பட அனைத்து பலன்களையும் வழங்கிட வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த  போராட்டம் நடக்கிறது.

போராட்டம் தொடக்க நாளன்று அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோவில்பட்டி கிளை தலைவர் கணேசமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தில் கிளை செயலாளர் பிச்சையா, சங்கரன்கோவில் கிளை பொருளாளர் ஞானராஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி இருந்தனர். வேலை நிறுத்தம் காரணமாக அஞ்சலக பணிகள் பெரிதும் பாதித்தன.,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *