சர்வதேச உரிமை கழக செயல் அலுவலகம் திறப்பு விழா

கோவில்பட்டி புதுகிராமத்தில் அமைந்துள்ள சாய் விஷ்ணு திருமண மஹாலில் சர்வதேச உரிமை கழக செயல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. முதன்மை செயலாளர் ஜான் பெஸ்லி தலைமை தாங்கினார். துணை தலைவர் காளிராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளரும் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினருமான எம்.ஆர்.வி.கவியரசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஜி.எம்.சங்கர்கணேஷ், மாவட்ட பிரதிநிதி மகேஷ்பாலா, கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி, கதர் ஸ்டோர் ராமசுப்பு, சங்கர், கோபி, முருகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்
