கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் மன்றத்தின் சார்பில் சர்.சி.வி ராமன் பிறந்த தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நாடார் உறவின்முறை சங்கத் தலைவர். ஏபிகே பழனிச்செல்வம் வழிகாட்டுதலின்படியும் பள்ளி பொருளாளர் ரத்னராஜா, பள்ளி குழு உறுப்பினர்கள் .தாழையப்பன், .தங்கமணி, பால்ராஜ், மனோகரன் ஆலோசனையின்படியும் நடந்தது. இந்திய அறிவியலின் தந்தை சர்.சி.வி. ராமன் பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த அறிவியல் கண்காட்சியில் கழிவு பொருட்களை கொண்டு படைக்கப்பட்ட அறிவியல் படைப்புகள் […]
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் 53 ஆண்கள் 6 பெண்கள் என 59 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 20 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும் சேவை மனப்பான்மையுடனும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் […]
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அந்த கட்சியின் கொடி மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2022 ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. அதிமுக வில் இருந்து ஒ,.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒ/.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என்று […]
எட்டையபுரம் தாலுக் சதுரங்க சங்கம் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து மாவட்ட அளவிலான சாய் கணேஷ் நினைவு சதுரங்கப் போட்டி எட்டையபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. போட்டியை ராஜா மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராம்குமார் ராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரன், கற்பக ராஜா மற்றும் எட்டையாபுரம் காவல் துறை உதவி ஆய்வாளர் சதீஷ், தலைமை ஆசிரியர் பழனிக்குமார் ஆகியோர் சதுரங்க போட்டியை தொடக்கி வைத்தனர். நாகலாபுரம் அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஆல்ட்ரின் அதிசயராஜ் […]
ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி; ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி இத்தொழிலை தொடங்க காலிஇடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் […]
முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- மேற்கண்டவாறு மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-‘ கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய அளவிலான சிறப்பு தனியார்துறையின் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 25.11.2023 அன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தூத்துக்குடி மில்லர்புரம் தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் […]
கங்கை நதி இந்தியர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. தாயாக, கடவுளாக கங்கை நதியை இந்தியர்கள் போற்றுகிறார்கள். வழிபடுகிறார்கள். உலகில் எந்த நாட்டிலும், எந்த நதிக்கும் இப்படி சிறப்பும், பெருமையும் கிடையாது. வட மாநில மக்கள் கங்கை நதியை வெறுமனே கங்கை என்று சொல்வ தில்லை. `கங்கா மாதா’ என்றுதான் சொல்வார்கள். ஜீவநதியான கங்கை இமயமலையில் உற்பத்தியாகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இமயமலையில் கங்கை எங்கு தோன்றுகிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. ஆய்வாளர்கள் எவ்வளவோ முயன்றும் […]
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த அக்டோபர் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் கோவிலில் மண்டகபடிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜை , அலங்காரம் மற்றும் மாலையில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. காலை 4 மணிக்கு நடை திறக்கபட்டு 4:30 மணிக்கு திருவனந்தல் பூஜை […]
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் தெற்குசிலுக்கம்பட்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நான்காவது சுற்றினை அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ,.பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று 6.11.23 தொடக்கி வைத்தார்கள். கிராம மக்கள் தங்கள் வளர்ப்பு மாடுகளை முகாமுக்கு அழைத்து வந்து சிகிச்சை பெற வைத்து திரும்ப அழைத்து சென்றனர், மாவட்ட ஆட்சியர்.கோ.லட்சுமிபதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் .எம்.சி.சண்முகையா , கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் […]