கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் தெற்குசிலுக்கம்பட்டி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நான்காவது சுற்றினை அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ,.பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று 6.11.23 தொடக்கி வைத்தார்கள். கிராம மக்கள் தங்கள் வளர்ப்பு மாடுகளை முகாமுக்கு அழைத்து வந்து சிகிச்சை பெற வைத்து திரும்ப அழைத்து சென்றனர்,
மாவட்ட ஆட்சியர்.கோ.லட்சுமிபதி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் .எம்.சி.சண்முகையா , கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் எஸ்.சஞ்சீவிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
