திருச்செந்தூர் கோவில் பசுமடம்; அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்

பசுமடம் கல்வெட்டு திறப்பின் போது எடுக்கப்பட்ட படம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பசுமடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று 6.11.23 அடிக்கல் நாட்டினர். மேலும் பசுமடம் கட்டுவதற்கான கல்வெட்டினையும் திறந்து வைத்தனர்.
இது தவிர கோவில் வளாகத்தில் யானை நினைவு மண்டபம் கட்டுவதற்கான கல்வெட்டினை அமைச்சர்கள் திறந்து வைத்தனர் இந்த் நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.முரளிதரன், மாவட்ட ஆட்சியர் .கோ.லட்சுமிபதி, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் .வசந்தராஜ் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.
