• June 7, 2025

மாவட்ட சதுரங்க போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.பரிசு வழங்கினார்

 மாவட்ட  சதுரங்க போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.பரிசு வழங்கினார்

எட்டையபுரம் தாலுக் சதுரங்க சங்கம் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து மாவட்ட அளவிலான சாய் கணேஷ் நினைவு சதுரங்கப் போட்டி எட்டையபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

போட்டியை ராஜா மேல்நிலைப்பள்ளி செயலாளர் ராம்குமார் ராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரன், கற்பக ராஜா மற்றும் எட்டையாபுரம் காவல்  துறை உதவி ஆய்வாளர் சதீஷ்,  தலைமை ஆசிரியர் பழனிக்குமார் ஆகியோர் சதுரங்க போட்டியை தொடக்கி வைத்தனர். நாகலாபுரம் அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஆல்ட்ரின் அதிசயராஜ் அனைவரையும் வரவேற்றார்.

9 வயதிற்கு உட்பட்டோர் 11 வயதுக்குட்பட்டோர் 13 வயதிற்குட்பட்டோர் 17 வயதுக்குட்பட்டோர் மற்றும்  பொதுப் பிரிவுஎன 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் மொத்தம் 221 சதுரங்க வீரர்கள் பங்கு பெற்றனர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

 ஒவ்வொரு பிரிவிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பத்து பரிசுகள் வீதம் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொது பிரிவில் முதல் பரிசு தர்மராஜுக்கு ரூபாய் 3000, இரண்டாவது பரிசு அன்புச்செல்வன் ரூபாய் 2000 மூன்றாவது பரிசு ஹரிஷ்வர்  ரூபாய் 1000, நான்கு முதல் பத்து பரிசுகளுக்கு தலா ரூ.750 வீதம்  வழங்கப்பட்டது

பரிசளிப்பு விழாவில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத் தலைவர் கதிர்வேல், நகரச் செயலாளர் பாரதி கணேசன், ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகச் செயலாளர் கற்பகவல்லி ஆகியோர்  கலந்து கொண்டனர்.

 போட்டிக்கான ஏற்பாடுகளை எட்டையாபுரம் தாலுகா சதுரங்க சங்கத் தலைவர் சந்தானராஜ், செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் முனியசாமி ஆகியோர் செய்திருந்தனர் விழா முடிவில் முத்துக்கனி  நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *