கோவில்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் மன்றத்தின் சார்பில் சர்.சி.வி ராமன் பிறந்த தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நாடார் உறவின்முறை சங்கத் தலைவர். ஏபிகே பழனிச்செல்வம் வழிகாட்டுதலின்படியும் பள்ளி பொருளாளர் ரத்னராஜா, பள்ளி குழு உறுப்பினர்கள் .தாழையப்பன், .தங்கமணி, பால்ராஜ், மனோகரன் ஆலோசனையின்படியும் நடந்தது.
இந்திய அறிவியலின் தந்தை சர்.சி.வி. ராமன் பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த அறிவியல் கண்காட்சியில் கழிவு பொருட்களை கொண்டு படைக்கப்பட்ட அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன. அறிவியல் கண்காட்சியினை பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

இதையொட்டி நடந்த நிகழச்சியின் போதுகடந்த 5ம் தேதி வள்ளியூரில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மண்டல அளவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் பிரபு தலைமை தாங்கினார்,. கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார்.
பள்ளி அறிவியல் ஆசிரியர் இந்துமதி அனைவரையும் வரவேற்றார்.தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மண்டல அளவில் கலந்துகொண்ட மாணவர்கள் ஹரிஹரன், சூரிய பிரகாஷ் ஆகியோருக்கு பள்ளி முதல்வர் பிரபு சான்றிதழ் வழங்கினார். அறிவியல் மன்ற ஆசிரியர்கள் ராஜா, ரேகா, காளீஸ்வரி, ராமமூர்த்தி உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறிவியல் ஆசிரியை கீதாராணி நன்றி கூறினார்.
