தூத்துக்குடியில் 25-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-‘
கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய அளவிலான சிறப்பு தனியார்துறையின் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 25.11.2023 அன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தூத்துக்குடி மில்லர்புரம் தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யலாம்.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து கல்வி தகுதி உடைய வேலைநாடுநர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வர்.
இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் 25.11.2023 அன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு வருகை புரிந்து முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Forms – ல் உங்கள் நிறுவனம் தொடர்பான விவரங்களை பதிவு செய்து தங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
https://forms.gle/3DPRfMDHvmsJUq156
