• June 7, 2025

Month: October 2023

செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 8-வது முறையாக காவல் நீட்டிப்பு

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலையை காரணம் காட்டி  தாக்கல் செய்யப்பட்ட  ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜரானார். விசாரணைய முடிவில் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 20 ந் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். இது செந்தில்பாலாஜிக்கு 8 வது […]

கோவில்பட்டி

மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்தகோரி கையெழுத்து இயக்கம்

கோவில்பட்டி மங்கள விநாயகர் கோவிலில் இருந்து  கடம்பூர் வரை செல்லும் மந்தித்தோப்பு சாலையில் வீடுகள் அதிக அளவில் உருவாகி வருகின்றன. இதனால் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது;. அதே சமயம் வாகன போக்குவரத்து அதிகம் காரணமாக அடிக்கடி இச்சாலையில் போக்குவரத்து நெரிசல்  உண்டாகிறது. மந்தி தோப்பு சாலை தொடக்க பகுதி மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி எட்டயபுரம் ரோடு சந்திப்பிலும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. மேலும் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே மங்கள விநாயகர் கோவில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஓவிய ஆசிரியருக்கு அரசு விருது; அமைச்சர் வழங்கினார்

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வேல் முருகனுக்கு தஞ்சை ஓவியங்கள் வரைவது பற்றி  சிறப்பாக கற்றுக் கொடுத்தமைக்கு சிறந்த கலை ஆசிரியருக்கான விருது மற்றும் ரூ10,000/-க்கான  காசோலையினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில்  வழங்கினார். நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை செயலாளர் மணிவாசன், கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி,கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் சிவ சவுந்தரவல்லி, உள்பட பலர் கலந்து […]

கோவில்பட்டி

`டி’ நமூனா பெற்றவர்களுக்கு காலிமனை இ-பட்டா ; கோவில்பட்டி தாசில்தார் தகவல்

கோவில்பட்டி தாசில்தார் லெனின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கோவில்பட்டி தாலுகா,  ஆதி திராவிடர் நல தனி தாசில்தார் மூலம் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுதப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகள் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றுக்கு ஒப்பதல் செய்யப்பட்ட லே அவுட்களில், ஏற்கனவே இலவச வீட்டுமனை ஒப்படை எனப்படும் `டி’ நமூனா பெற்றவர்களுக்கு , காலி மனை இ-பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே தங்களிடம் உள்ள […]

ஆன்மிகம்

தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன்கோவிலில் தமிழ்மாதம் கடைசி வெள்ளிகிழமை  பக்தர்கள் அதிகம் கூடுவார்கள். ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கு தனி மகத்துவம் உண்டு. இன்று புரட்டாசி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால்  மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை, வேல் பூஜை நடைபெற்றது.இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை […]

தூத்துக்குடி

சரக்கு ஆட்டோ மீது பஸ் மோதியது; 7 பேர் படுகாயம்  

தூத்துக்குடியில் இருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் திருநெல்வேலிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் மகேஷ் (37) ஓட்டினார். சில தினங்களாக தூத்துக்குடி-பாளை நெடுஞ்சாலையில் ரோடு பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், ஒருவழி பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டிந்தன.இதனால் அந்த பாதையில் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டு வந்தது.  இந்த நிலையில் இன்று திருநெல்வேலி  நோக்கி சென்ற பஸ் மறவன்மடம் அருகே வலது பக்கமாக ஒருவழிப்பாதையில் சென்று கொண்டிருந்தது.  அப்போது செக்காரக்குடியில் இருந்து தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டுக்கு […]

கோவில்பட்டி

மன அழுத்தத்தில் இருந்து விடுபட மாணவிகளுக்கு ஆலோசனை

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட மன நல திட்டம், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம், அரசு மகளிர் மேல்நிலைபள்ளி இணைந்து சர்வதேச மன நல விழா நடத்தின. பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார், ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன் ராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட மன நல திட்ட மருத்துவர் ஜோனா தலைமைதாங்கி  மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக பயிற்சி அளித்தார் . மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஆலோசனைகளும் […]

கோவில்பட்டி

அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள்  

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி,  6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள்  தொடங்கி நடைபெற்று வருகிறது.. 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 9  மற்றும் 10 ஆம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11  மற்றும் 12 ஆம் வகுப்பு ஒரு பிரிவாகவும்  என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்படவுள்ளது, 6  முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1. […]

கோவில்பட்டி

தகவல் அறியும் உரிமைசட்டம் நாள்: மாணவர்களுக்கு பேச்சுபோட்டி

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் தகவல் அறியும்  உரிமை சட்டம் நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுபோட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகள்   ஆர்வத்துடன் பங்கேற்றனர். விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜான் கணேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி தாசில்தார் லெனின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கட்டுரை போட்ட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் மாரி ஆனந்த லட்சுமி, முத்தமிழ், இலக்கியா, பேச்சுபோட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஹரிகிருஷ்ணன், விஜயலட்சுமி, சஞ்சய்குமார், […]

தூத்துக்குடி

தூத்துக்குடி புதிய கலெக்டராக லட்சுமிபதி  நியமனம்

சென்னை: தூத்துக்குடி, கரூர், திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- :தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக லட்சுமிபதி  நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆட்சியராக இருக்கும் செந்தில்ராஜ் சிப்காட் மேலாண் இயக்குனராக நியமனம் செய்யபட்டடுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியராக தங்கவேல் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே ஆட்சியராக உள்ள பிரபு சங்கர், திருவள்ளூர் மாவட்ட […]