• June 8, 2025

கோவில்பட்டி ஓவிய ஆசிரியருக்கு அரசு விருது; அமைச்சர் வழங்கினார்

 கோவில்பட்டி ஓவிய ஆசிரியருக்கு அரசு விருது; அமைச்சர் வழங்கினார்

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வேல் முருகனுக்கு தஞ்சை ஓவியங்கள் வரைவது பற்றி  சிறப்பாக கற்றுக் கொடுத்தமைக்கு சிறந்த கலை ஆசிரியருக்கான விருது மற்றும் ரூ10,000/-க்கான  காசோலையினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில்  வழங்கினார்.

நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை செயலாளர் மணிவாசன், கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி,கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் சிவ சவுந்தரவல்லி, உள்பட பலர் கலந்து கொண்டனர்,

 சிறந்த கலை ஆசிரியர் விருது பெற்ற வேல்முருகனுக்கு  கோவில்பட்டி பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *