அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 8-வது முறையாக காவல் நீட்டிப்பு

அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலையை காரணம் காட்டி தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை இன்று சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜரானார்.
விசாரணைய முடிவில் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 20 ந் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். இது செந்தில்பாலாஜிக்கு 8 வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
