• June 8, 2025

மன அழுத்தத்தில் இருந்து விடுபட மாணவிகளுக்கு ஆலோசனை

 மன அழுத்தத்தில் இருந்து விடுபட  மாணவிகளுக்கு ஆலோசனை

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட மன நல திட்டம், ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம், அரசு மகளிர் மேல்நிலைபள்ளி இணைந்து சர்வதேச மன நல விழா நடத்தின. பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா அனைவரையும் வரவேற்றார், ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன் ராஜா முன்னிலை வகித்தார்.

மாவட்ட மன நல திட்ட மருத்துவர் ஜோனா தலைமைதாங்கி  மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் விதமாக பயிற்சி அளித்தார் . மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஆலோசனைகளும் வழங்கப்பட்டது,

இந்நிகழ்வில் அரசு  மகளிர் மேல்நிலை பள்ளி ஆசிரியர்,ஆசிரியைகள்,சுப்ரமணியன், ராஜேஸ்வரி, கவிதா, சுஜா,ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன மேற்பர்வையாளர் மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். உதவி தலைமை  ஆசிரியை உஷா ஜோசப்பின் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *