அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள்

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, 6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது..
6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஒரு பிரிவாகவும் என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்படவுள்ளது,
6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 1. கவின்கலை / நுண்கலை, 2. இசை (வாய்ப்பாட்டு), 3. கருவி இசை, 4. நடனம், 5. நாடகம், 6. மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழும்,
9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1. கவின்கலை / நுண்கலை, 2. இசை (வாய்ப்பாட்டு), 3. கருவி இசை – தோற் கருவி, 4. கருவி இசை துளை – காற்றுக் கருவிகள், 5. கருவி இசை தந்திக் கருவிகள் 6. இசைச் சங்கமம் , 7. நடனம், 8. நாடகம், 9. மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழும்.
11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1. காண்கலை / நுண்கலை, 2. இசை வாய்ப்பாட்டு, 3. கருவி இசை, தோற் கருவி, 4. கருவி இசை – துளை / காற்றுக்கருவி, 5. கருவி இசை – தந்திக் கருவிகள், 6. இசைச் சங்கமம், 7. நடனம், 8. நாடகம், 9. மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
போட்டிகள் தனி நபராக அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம் ஒருவர் ஏதேனும் மூன்று தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிக பட்சமாக பங்கு பெற முடியும்.
பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களை (முதலிடம்) வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் (முதலிடம் மற்றும் இரண்டாமிடம்) மாவட்ட அளவிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிகையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்காணும் அட்டவணைப்படி கலைதிருவிழா போட்டிகள் நடைபெற உள்ளன.
பள்ளி அளவிலான போட்டிகள்: 10.10.23 முதல் 14.10.23 வரை
வட்டார அளவிலான போட்டிகள் : 18.10.23 முதல் 21.10.23 வரை
மாவட்ட அளவிலான போட்டிகள்: 26.10.23 முதல் 28.10.23 வரை
மாநில அளவிலான போட்டிகள்: 21.11.23 முதல் 24.11.23 வரை
வட்டார மற்றும் மாவட்ட அளவில் பங்கு பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து வகை அரசுப்பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இக்கலைத் திருவிழா போட்டிகளில் பெருமளவு பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்டதகவல்கள்அரசுசெய்திகுறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
