தகவல் அறியும் உரிமைசட்டம் நாள்: மாணவர்களுக்கு பேச்சுபோட்டி

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்டம் நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுபோட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜான் கணேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி தாசில்தார் லெனின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
கட்டுரை போட்ட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் மாரி ஆனந்த லட்சுமி, முத்தமிழ், இலக்கியா, பேச்சுபோட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஹரிகிருஷ்ணன், விஜயலட்சுமி, சஞ்சய்குமார், கார்த்திகா ஆகியோருக்கு தாசில்தார் லெனின் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தொடக்கத்தில் முதுகலை ஆசிரியர் கு.செல்வம் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் முத்துகணேஷ் நன்றி கூறினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், பள்ளி செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்,
