• June 7, 2025

Month: September 2023

தூத்துக்குடி

சிறந்த கிடேரி கன்றுகள் வளர்ப்போருக்கு விருது

டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் அங்கமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பயனாளிகளுக்கு தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன, மேலும் கால்நடை வளர்ப்பு பற்றி பல்வேறு ஆலோசனைகள் சொல்லப்பட்டன.  சிறந்த கிடேரி கன்றுகள் வளர்ப்போருக்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று விருது வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்.எம்.சி.சண்முகையா,மாவட்ட ஊராட்சித்தலைவர்.அ.பிரம்மசக்தி ,ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ச.ஜனகர் உள்பட பலர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மக்கள் பார்வைக்காக `வந்தே பாரத் ரெயில்’ ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்படுகிறது

தெற்கு ரெயில்வேயில் சென்னை-மைசூரு, சென்னை-கோவை, திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு  வந்தே பாரத் ரெயில் நாளை மறுநாள்  24-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. .அன்றைய தினம் திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் தொடக்க விழா நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக ரெயில் சேவையை தொடங்கிவைக்கிறார். திருநெல்வேலியில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் 7.15க்கு விருதுநகர், 7.50 க்கு மதுரை, 8.40க்கு […]

தூத்துக்குடி

கனிமொழி எம்.பி.ஏற்பாட்டில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உமரிக்காடு, வாழவல்லான், கொற்கை, அகரம், மாரமங்கலம், முக்காணி, கொட்டாரக்குறிச்சி, ஆறுமுகமங்கலம், பழையகாயல், கோவங்காடு, மஞ்சள்நீர்க்காயல், இடையர்காடு, ஆகிய ஊர்களுக்கு மஞ்சள்நீர்க்காயல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.ஏற்பாட்டின்பேரில்  பொதுமக்களுக்கு குடிநீர்  விநியோகம் செய்யப்படுகிறது. மேலும்  சாத்தான்குளம் யூனியன் தாமரைமொழி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்தன்விளை பூச்சிக்காடு கிராம மக்கள் குடிநீர் பிரச்சினையால் அல்லாடி வந்தனர். இக்கிராம மக்கள் கனிமொழி எம்.பி.யை […]

தூத்துக்குடி

கப்பல் பணியாளர் வீட்டில் 25 பவுன் நகைகள்-ரூ.5. லட்சம் கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலையை சேர்ந்தவர் ரொபிஸ்டன் (வயது 56). இவர் துபாயில் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி- மகன் ஆகியோர் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆலந்தலை தெற்கு தெருவில் உள்ள ரொபிஸ்டன் அக்கா ஜோஸ்லின் (64) வீடு கட்டி வருவதால், கடந்த 10 நாட்களாக ரொபிஸ்டன் வீட்டில் இரவு தங்கி வந்தார். சம்பவத்தன்று இரவு ரொபிஸ்டன் வீட்டிற்கு ஜோஸ்லின் சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது […]

ஆன்மிகம்

கடன் தொல்லை நீக்கும் லட்சுமி நரசிம்மர் விரதம்

பூவரசன்குப்பம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோவில் கருவறையில் அழகு சொரூபமாக நரசிம்ம மூர்த்தியும், அமிர்தவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இத்திருக்கோவிலில் இருக்கும் தாயார் அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள். இதனால் அமுதவல்லி என திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள். கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்த வல்லித்தாயாரை) அணைத்துக் கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது. இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். […]

தூத்துக்குடி

குண்டர் சட்டத்தில் கைதான போலீஸ் ஏட்டு டிஸ்மிஸ்; மாவட்ட சூப்பிரண்டு நடவடிக்கை

தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ்  நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் பொன்மாரியப்பன். இவர் கடந்த 9.5.2021 அன்று தனக்கு  உடல்நிலை சரியில்லை என்று உதவி ஆய்வாளரிடம் பிணி அறிக்கை செய்து, பிணிக்கடவுச்சீட்டு வாங்கி சென்றார். அதே நாள் இரவு தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடன் சேர்ந்து தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்த லூர்து ஜெயசீலன் என்பவரை கொலை செய்த வழக்கில் 10.5.2021 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ1.83 கோடி செலவில் புதுப்பித்தல் பணி

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் தகைசால் பள்ளி திட்டத்தின் கீழ் ரூ1.83 கோடி மதிப்பில் கட்டிடம் புதுப்பித்தல் பணிக்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது. தமிழக அரசின் தகை சால் பள்ளி திட்டத்தின் கீழ் 1.83 கோடி மதிப்பில் தமிழக காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில் பள்ளி கட்டிடங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. தரைதளங்கள், மேல்தளங்கள், ஆய்வு கூடங்கள், வகுப்பறைகள், புதுப்பிக்கபடுகின்றன. இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை […]

செய்திகள்

திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரெயில் சேவை  24-ம் தேதி தொடக்கம்; கோவில்பட்டியில் நிற்காது

நாட்டின் முதல் வந்தே பாரத் ரெயில் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்த ரெயிலின் சேவை டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி தொடங்கியது. தற்போது, வந்தே பாரத் ரெயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரெயில்வேயில் சென்னை-மைசூரு, சென்னை-கோவை, திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. அதிவேக பயணம், குளிர்சாதன வசதி உள்ளிட்ட காரணங்களால் பயணிகள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்; சனிக்கிழமை நடக்கிறது

கோவில்பட்டியில் 23ம் தேதி சனிக்கிழமை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர்  கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகள்  நல இயக்குனர் ஆணைப்படி  டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு;  தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய மூன்று கோட்டங்களில்; உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 23.9.2023 அன்று  கோவில்பட்டி […]

செய்திகள்

சுமை தூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல்காந்தி; டெல்லி ரெயில் நிலையத்தில் பரபரப்பு

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி சமீப நாட்களாக பொது இடங்களுக்குச் சென்று, டிரைவர், விவசாயிகள், மெக்கானிக்குகள் போன்றோரை சந்தித்து அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி கேட்டறிந்து வருகிறார். இந்தநிலையில், டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்திற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி திடீரென சென்றார். அப்போது ரெயில் […]