• June 7, 2025

சிறந்த கிடேரி கன்றுகள் வளர்ப்போருக்கு விருது

 சிறந்த கிடேரி கன்றுகள் வளர்ப்போருக்கு விருது

டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் அங்கமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பயனாளிகளுக்கு தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன, மேலும் கால்நடை வளர்ப்பு பற்றி பல்வேறு ஆலோசனைகள் சொல்லப்பட்டன.

 சிறந்த கிடேரி கன்றுகள் வளர்ப்போருக்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று விருது வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்.எம்.சி.சண்முகையா,மாவட்ட ஊராட்சித்தலைவர்.அ.பிரம்மசக்தி ,ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ச.ஜனகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *