• June 7, 2025

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ1.83 கோடி செலவில் புதுப்பித்தல் பணி

 கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ1.83 கோடி செலவில் புதுப்பித்தல் பணி

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் தகைசால் பள்ளி திட்டத்தின் கீழ் ரூ1.83 கோடி மதிப்பில் கட்டிடம் புதுப்பித்தல் பணிக்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது.

தமிழக அரசின் தகை சால் பள்ளி திட்டத்தின் கீழ் 1.83 கோடி மதிப்பில் தமிழக காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில் பள்ளி கட்டிடங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. தரைதளங்கள், மேல்தளங்கள், ஆய்வு கூடங்கள், வகுப்பறைகள், புதுப்பிக்கபடுகின்றன. இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள், உதவி தலைமை ஆசிரியர்கள் உஷா ஜோஸ்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

உதவி தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார். தமிழக காவல் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர் கட்டிட புதுப்பித்தல் பணியினை தொடக்கி வைத்து பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதவி செயற்பொறியாளர் குமரேசன், இளநிலை பொறியாளர் காட்வின், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், ஒப்பந்ததாரர் ராஜகோபால், உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன், உடற்கல்வி இயக்குனர் காளிராஜ், உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *