கனிமொழி எம்.பி.ஏற்பாட்டில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உமரிக்காடு, வாழவல்லான், கொற்கை, அகரம், மாரமங்கலம், முக்காணி, கொட்டாரக்குறிச்சி, ஆறுமுகமங்கலம், பழையகாயல், கோவங்காடு, மஞ்சள்நீர்க்காயல், இடையர்காடு, ஆகிய ஊர்களுக்கு மஞ்சள்நீர்க்காயல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.ஏற்பாட்டின்பேரில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும் சாத்தான்குளம் யூனியன் தாமரைமொழி ஊராட்சிக்கு உட்பட்ட ஆனந்தன்விளை பூச்சிக்காடு கிராம மக்கள் குடிநீர் பிரச்சினையால் அல்லாடி வந்தனர். இக்கிராம மக்கள் கனிமொழி எம்.பி.யை செல்போனில் தொடர்பு கொண்டு, தங்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த கனிமொழி எம்.பி., அந்த கிராம மக்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை லாரியில் இலவசமாக குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தார். தங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக லாரி மூலம் இலவசமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்த கனிமொழி எம்.பி.க்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
