கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று கோகுலாஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது . இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை,கணபதி ஹோமம் , நவக்கிரக ஹோமம் ,மூலமந்திர ஹோமம் ,பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோகுலாஷ்டமியை முன்னிட்டு இரவு 7 மணிக்கு கிருஷ்ணர் சிலை அலங்கரிக்கப்பட்டு அவல், வெண்ணெய், தயிர், முறுக்கு படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். கிருஷணர் வேடமணிந்து […]
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சமூக ஊடக பிரிவினர் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி நேற்று (5.9.2023) சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் “சண்டியர் மூர்த்தி” (sandiyar moorthy) என்ற பெயரிலான பக்கத்தில் கோவில்பட்டி அருகே கடம்பூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கையில் அரிவாளுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உதவி ஆய்வாளர் சத்திய நாராயணன் தலைமையிலான மாவட்ட காவல்துறை சமூக ஊடக பிரிவினர் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட […]
கோவில்பட்டி கிருஷ்ணாநகர் ஹவுசிங் போர்டு ஸ்ரீ பிருந்தாவனம் தியான மடத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை கணபதி ஹோமம், சுதர்ஷன ஹோமம் நடைபெற்றது. 8மணியில் இருந்து 10 மணி வரை சிறப்பு பஜனை நடந்தது. காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்தனர். அவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 11 மணிக்கு மேல் கிருஷ்ணருக்கு […]
விடுதலைப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்தநாள் விழா கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக கோவில்பட்டி சவுபாக்யா மகாலில் கொண்டாடப்பட்டது. கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப்பெருமாள் மற்றும் சாத்தூர் கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவர் ஜெயா ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்ச்செம்மல் கருத்தப்பாண்டி, வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர் கருத்துரை […]
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14 கடற்கரை மாவட்டங்களில் வருகிற 24 ம் தேதி ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 163 கிலோமீட்டர் கடலோரப் பகுதிகளில் 15 லட்சம் பனை விதைகள் நடப்படுகிறது. இதற்கான ஶ்ரீவைகுண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமத்துவ மக்கள் கழகம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி தலைமையில் சேகரிக்கப்பட்ட 3000 பனை […]
சனாதனம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவரது பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் […]
நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராக கோவில் கொண்டருளுகிறார். இக்கோவில் , ரத்தின சபை என்று போற்றப்படுகிறது. சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பார்கள். அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது… சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். இப்படி வருவதைக் கண்ட பார்வதி, சிவபெருமானிடம், இவர் யார்? கேட்டாள். அதற்கு பதிலளித்த சிவபெருமான், […]
குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் சிகப்பு நிற குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும். இப்படியான ஒரு நடைமுறை இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும் இதனை செய்கிறார்கள். அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு. ஒரு வயதான பெண்மணி […]
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 152 வது பிறந்த நாளை ஒட்டி அதிமுக சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள வ.உ. சிதம்பரனார் திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது :- சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.நடிகர் சத்யராஜ் ஒரு படத்தில் இரண்டு பிரிவினர் அடித்துக் கொண்டால்தான் நாம் பிரச்சனை இல்லாமல் இருக்க முடியும் என்கின்ற வகையில் நடத்திருப்பார். அதுபோல ஒரு […]
கோவில்பட்டி கருணாநிதி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 36). இவர் வேலாயுதபுரம்- சாத்தூர் ரோட்டிலுள்ள பிழைபொறுத்த அய்யனார் கோவில் அருகே ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவர் இரவு வேலையை முடித்து விட்டு அங்கேயே, இரவு காவலர் ஆர்தருடன் சேர்ந்து தூங்கினார். அதிகாலை சுமார் 4 மணிக்கு எழுந்தபோது, அங்கிருந்த மோட்டார் கியர் பாக்ஸை ஒருவர் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றதை கண்டு திடுக்கிட்டார். உடனே அவரை காவலர் ஆர்தருடன் சேர்ந்து […]