மதத்தை இழிவு படுத்துவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது ; டி.ஜெயக்குமார் பேட்டி.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 152 வது பிறந்த நாளை ஒட்டி அதிமுக சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள வ.உ. சிதம்பரனார் திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது :-
சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.நடிகர் சத்யராஜ் ஒரு படத்தில் இரண்டு பிரிவினர் அடித்துக் கொண்டால்தான் நாம் பிரச்சனை இல்லாமல் இருக்க முடியும் என்கின்ற வகையில் நடத்திருப்பார்.
அதுபோல ஒரு திட்டமிட்டு நாட்டில் உள்ள பிரச்சனைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் மறைப்பதற்காக இதுபோன்று செய்கிறர்கள்.பல இடங்களில் பள்ளம் தோண்டி போட்டுவிட்டு போக்குவரத்து நெரிசல் செய்துள்ளார்கள்.
தமிழகம் தற்போது கொலை மாநிலமாக, கொள்ளை மாநிலமாக இருக்கிறது. வாழ்வதற்குரிய நிலைமையை இந்த விடியா அரசு உறுதிப்படுத்தவில்லை. சட்டம் -ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற வகையில் உள்ளது. நாடு சீர் கெட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உள்ளது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு. ஒரு பக்கம் மின் கட்டண உயர்வு. ஒரு பக்கம் வீட்டு வரி. சொத்து வரி, பால் விலை உயர்வு விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.
மக்களை ஏமாற்ற வேண்டும் திசை திருப்ப வேண்டும்,ஊழலை திசை திருப்ப சனாதனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து விமர்சனப் பொருளாய் ஆகியிருக்கிறது.
1947க்கு பிறகு சுதந்திரம் பெற்றதற்கு பின்பு அரசியலமைப்பு சட்டத்தின்படி எல்லோருக்கும் எல்லா உரிமையும் வழங்கப்பட்டு எல்லா ஆட்சிகளிலும் மக்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது. ஆனால் திமுக ஆட்சியில் இது கிடையாது.
அடிப்படை வசதிகளிலிருந்து மக்களுடைய சமூக நலத்திற்கான பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்து இட ஒதுக்கீட்டில் ஒரு வரலாற்றை உருவாக்கி ஆதிதிராவிடருக்கு உரிய அந்தஸ்தை வழங்கிய கட்சி அதிமுக.
சமதர்மம் பேசும் இவர் இந்திய கூட்டணியில் திருமாவளவனை கன்வீரராக போட ஏன் முயற்சி எடுக்கவில்லை அப்போது சம தர்மம் எங்கு போனது.
உதயநிதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகம் தேவை. அவரது மகனுக்கு முழுவதுமாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு மதத்தை இழிவு படுத்தலாமா.மக்களை திசை திருப்பும் முயற்சியாகவும் மக்களை ஏமாற்றும் முயற்சியாகவும் உதயநிதி செய்து வருகிறார்.2024 இது அனைத்தும் பிரதிபலிக்கும்.
இந்த ஆட்சிக்கு எதிரான அலை வீசுகிறது.கழகத்திற்கு இது ஆதரவான அலையாக இருக்கும். கிறிஸ்துவ மதமாக இருந்தாலும் இஸ்லாமியமாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் மதத்தை இழிவு படுத்துவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.பொதுவாக ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் காவல்துறையும் இன்று அடி வாங்கும் நிலைமையில் தான் உள்ளது.ஆசிரியர்களில் அரசு ஊழியர்கள் வீதியில் இருந்து போராடுகிற நிலையில் ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.ஒரு மதத்தை இழிவு படுத்தினால் அது யாராக இருந்தாலும் அது தண்டனைக்குரிய விஷயம். உதயநிதி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய காரணத்தினால் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
