• June 7, 2025

ஒர்க் ஷாப்பில் திருடியவர், கையும் களவுமாக பிடிபட்டார்  

 ஒர்க் ஷாப்பில் திருடியவர், கையும் களவுமாக பிடிபட்டார்  

கோவில்பட்டி கருணாநிதி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 36). இவர் வேலாயுதபுரம்- சாத்தூர் ரோட்டிலுள்ள பிழைபொறுத்த அய்யனார் கோவில் அருகே ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவர் இரவு வேலையை முடித்து விட்டு அங்கேயே, இரவு காவலர் ஆர்தருடன் சேர்ந்து தூங்கினார். அதிகாலை சுமார் 4 மணிக்கு எழுந்தபோது, அங்கிருந்த மோட்டார் கியர் பாக்ஸை ஒருவர் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றதை கண்டு திடுக்கிட்டார். உடனே அவரை காவலர் ஆர்தருடன் சேர்ந்து பிடித்து கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம்  போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்தி நடத்திய விசாரணையில், அவர் கெச்சிலாபுரம் சந்தீப் நகர் ரத்தினம் மகன் முனியசாமி (45) என்பதும், அவர் திருட்டுக்கு பயன் படுத்திய மோட்டார் சைக்கிளும் கடந்த ஜுலை மாதம் 21- ந்தேதி கோவில்பட்டியில் நத்தம் கிராமத்தை சேர்ந்த அய்யலுசாமி என்பவரிடம் இருந்து  திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியசாமியை கைது செய்து மோட்டார்சைக்கிள், மோட்டார் கியர் பாக்ஸ் ஆகியவற்றை மீட்டனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *