கிருஷ்ணஜெயந்தி விழா; கிருஷ்ணர் வேடமிட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பரிசு

கோவில்பட்டி கிருஷ்ணாநகர் ஹவுசிங் போர்டு ஸ்ரீ பிருந்தாவனம் தியான மடத்தில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை கணபதி ஹோமம், சுதர்ஷன ஹோமம் நடைபெற்றது. 8மணியில் இருந்து 10 மணி வரை சிறப்பு பஜனை நடந்தது.
காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்தனர். அவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 11 மணிக்கு மேல் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அவர் கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவர் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பகல் 12 மணிக்கு மேல் அன்னதானம் விநியோகிக்கப்பட்டது.
