• June 7, 2025

தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் 15 லட்சம் பனை விதைகள் நட ஏற்பாடு

 தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் 15 லட்சம் பனை விதைகள் நட ஏற்பாடு

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14 கடற்கரை மாவட்டங்களில் வருகிற 24 ம் தேதி ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது,

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 163 கிலோமீட்டர் கடலோரப் பகுதிகளில் 15 லட்சம் பனை விதைகள் நடப்படுகிறது. இதற்கான  ஶ்ரீவைகுண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சமத்துவ மக்கள் கழகம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி தலைமையில் சேகரிக்கப்பட்ட 3000 பனை விதைகளை பனை வாரிய தலைவர் எர்ணாவூர் A.நாராயணனிடம் சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் அக்கட்சியினர் வழங்கினார்கள்.

 இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் ,மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் “லயன்”பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ்,  வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், மாநகரச் செயலாளர் உதயசூரியன், அவை தலைவர் மதியழகன் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *