• June 7, 2025

Month: August 2023

கோவில்பட்டி

திருமாவளவன் பிறந்தநாள் : அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு ரொட்டி, பழங்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சு முருகன் தலைமையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மற்றும் உள் நோயாளிகளுக்கு ரொட்டி, பழங்கள், கடலை மிட்டாய் வழங்கப்பட்டதுஇந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் பெஞ்சமின்பிராங்க்ளின், முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபாவளவன், கோவில்பட்டி நகரச் செயளாலர் கருப்பசாமி, […]

சினிமா

`ஜெயிலர்’ திரைப்படம் ஒரு வார வசூல் ரூ.375.40 கோடியை தாண்டியது

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘ஜெயிலர்’ உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீசில் ரூ.375 கோடியைத் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஜெயிலர்’ திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த […]

கோவில்பட்டி

பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன், காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழாவில் கோலாட்டம் அடிக்கும் சிறுமியர் மற்றும் பெண்களுக்கு பரிசு, மற்றும் 1௦௦8 பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் என்ஜினீயர் ஜி.தவமணி தலைமை தாங்கினார். கோலாட்டம் ஆடிய சிறுமியர்களுக்கு கவுன்சிலர் லவராஜா பரிசுகள் வழங்கினார். 1,௦௦8 பெண்களுக்கு மங்கள பொருட்களை கவுன்சிலர் ஜோஸ்மின் லூர்துமேரி, தி.மு.க.சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டி, சுற்றுப்புற பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை

கோவில்பட்டி  நகர் , புறநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 19.8.23 சனிக்கிழமை காலை  8  மணி முதல் மாலை 5 மணி வரை  கீழ்க்கண்ட பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுகிறது.  V. M. S  நகர் , பைபாஸ் ரோடு , மூப்பன்பட்டி , இளையரசனேந்தல் மெயின் ரோடு , நடராஜபுரம் , மார்க்கெட் ரோடு , பழைய பேருந்து நிலையம் , முகமது சாலியாபுரம் , சங்கரலிங்கபுரம் , […]

செய்திகள்

அ. தி. மு. க.. மாநாட்டுக்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு இல்லை ;

வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான பிரசார வாகனத்தை சென்னை பழையவண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :- இந்தியாவில் இதுவரை எந்த கட்சியும் நடத்தாத வகையில் வருகிற 20 ந் தேதி மதுரையில் அ. தி. மு. க. எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.40க்கு 40 என்ற […]

கோவில்பட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு

கோவில்பட்டி வேலாயுதபுரம் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 77 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.மன்ற நிர்வாகி ஜோதி காமாட்சி ஏற்பாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது,இதில் நிர்வாகிகள் முருகன், மகாலிங்கம், பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

சிறந்த சேவை :கோவில்பட்டி போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

இந்தியாவின் 77 வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவின் போது தியாகிகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் சிறந்த பணியாற்றிய 60 பேருக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.இவர்களில் கோவில்பட்டியில் பணியாற்றும் காவல்துறையினரும் அடங்குவர். மேற்கு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் அரிகண்ணனுக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் […]

கோவில்பட்டி

பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்; பா.ஜனதா சார்பில் கோரிக்கை மனு  

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சி அன்னை தெரேசா நகரில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கவிதா அன்பு ராஜ் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் மேரி, பாண்டவர்மங்கலம் ஊராட்சி செயலாளர் குருவம்மாள் ஆகியோர்  கலந்து கொண்டார்கள் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பா.ஜனதா ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து தலைமையில் துணைத்தலைவர் காளிராஜ் மாவட்ட செயலாளர் கல்யாண கணேசன் ராஜூ […]

கோவில்பட்டி

இந்திய சப்ஜூனியர் ஆக்கி அணி பயிற்சி முகாமுக்கு கோவில்பட்டி வீரர்கள் 2 பேர்

ஒடிசாவில் மே மாதம் நடைபெற்ற தேசிய சப் ஜூனியர் ஆண்கள்  ஆக்கி போட்டியில் தமிழக அணி கலந்துகொண்டு விளையாடியது. தமிழக அணியில் 13 வீரர்கள் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது தனி சிறப்பாகும்.  அணியின் மேலாளராக இந்திய ஆக்கி அணியின்  முன்னாள் வீரர் அஸ்வின் செயல்பட்டார். அணியின் தலைவராக அருண் இருந்தார். இவர்களும் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் தான். இப்போட்டியில் சிறப்பாக விளையாடியமைக்காக தமிழக அணியில் இருந்து ஜெ அருண் , எம்..சுந்தர் அஜித் ஆகிய இருவருக்கும் இந்திய சப்ஜூனியர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி லெனின்நகர் கற்பக விநாயகர் கோவில் கொடை விழா

கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு லெனின் நகரில் உள்ள கற்பக விநாயகர், முத்துமாரியம்மன், வீர கருப்பசாமி கோவில் 49-வது ஆண்டு கொடை விழா கடந்த 8-ந் தேதி  நாட்கால் நடுதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.’ இன்று காலை 6 மணி அளவில்  மங்கள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் , தீர்த்தகுடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோவில் வந்தடைந்தனர்.., பகல் 12 மணிக்கு மேல் அன்னதானம் நடைபெற்றது. இரவு 8 […]