• June 8, 2025

சிறந்த சேவை :கோவில்பட்டி போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

 சிறந்த சேவை :கோவில்பட்டி போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

இந்தியாவின் 77 வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவின் போது தியாகிகள் மற்றும் சிறந்த சேவை புரிந்தோருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் சிறந்த பணியாற்றிய 60 பேருக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
இவர்களில் கோவில்பட்டியில் பணியாற்றும் காவல்துறையினரும் அடங்குவர். மேற்கு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் அரிகண்ணனுக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


மேலும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகாதேவி,கோவில்பட்டி கிழக்கு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் மங்கையற்கரசி, கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிரெட்ரிக் ராஜன், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம்) தலைமை காவலர் வெங்கடேஷ், கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ஸ்டீபன் இளையராஜா ஆகியோரும் ஆட்சியரிடம் இருந்து பாராட்டு சான்றிதழ் பெற்றனர்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உடன் இருந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *