பாண்டவர்மங்கலம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்; பா.ஜனதா சார்பில் கோரிக்கை மனு

இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சி அன்னை தெரேசா நகரில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கவிதா அன்பு ராஜ் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர் மேரி, பாண்டவர்மங்கலம் ஊராட்சி செயலாளர் குருவம்மாள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் பா.ஜனதா ஊடக பிரிவு மாவட்டத் தலைவர் அம்மன் மாரிமுத்து தலைமையில் துணைத்தலைவர் காளிராஜ் மாவட்ட செயலாளர் கல்யாண கணேசன் ராஜூ நகர் , இ.பி. காலனி அன்னை தெரேசா நகர் அடிப்படை வசதியான கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை ஊராட்சித் தலைவர் கவிதா அன்பு ராஜிடம் வழங்கினார்கள்.
கோரிக்கையை நிறைவேற்ற ஞாயிற்றுக்கிழமைக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் 21 ம் தேதி திங்கட்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் பா.ஜ.க. சார்பாகவும் ராஜிவ் நகர். இ.பி. காலனி பொதுமக்கள் சார்பாகவும் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
ராஜிவ்நகர் பல்லாக்கு சாலை முதல் இ.பி. காலனி சாலை முடிவு வரை உள்ள சாலையை சரி செய்ய வேண்டும், வாறுகால்அமைக்க வேண்டும் இ.பி. காலனி குறுக்குத் தெருவில் வாறுகால் தோண்டி 60 நாட்கள் ஆகியும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கதிர்வேல் நகரில் வாறுகால், சாலை, மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் . இவை அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் கேட்ட்டுக்கொண்டனர்.
