இந்திய சப்ஜூனியர் ஆக்கி அணி பயிற்சி முகாமுக்கு கோவில்பட்டி வீரர்கள் 2 பேர் தேர்வு

ஒடிசாவில் மே மாதம் நடைபெற்ற தேசிய சப் ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டியில் தமிழக அணி கலந்துகொண்டு விளையாடியது. தமிழக அணியில் 13 வீரர்கள் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது தனி சிறப்பாகும்.
அணியின் மேலாளராக இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் செயல்பட்டார். அணியின் தலைவராக அருண் இருந்தார். இவர்களும் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் தான்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடியமைக்காக தமிழக அணியில் இருந்து ஜெ அருண் , எம்..சுந்தர் அஜித் ஆகிய இருவருக்கும் இந்திய சப்ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இரு வீரர்களையும் ஆக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜெ. மனோகரன், செயலாளர் செந்தில் ராஜ்குமார், ஆக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமை நாயகம், செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, முதுநிலை துணைத் தலைவர் நாகமுத்து, துணைத் தலைவர்கள் மணிமாறன் , உமா சங்கர் , அழகுதுரை துணைச் செயலாளர் முருகன், மாரியப்பன், சந்தானராஜ், ஜார்ஜ் ஈஸ்டர் , தங்கராஜ், ராஜ மனோகரன் ஆகியோர் பாராட்டினர்.
