• June 8, 2025

கோவில்பட்டி லெனின்நகர் கற்பக விநாயகர் கோவில் கொடை விழா

 கோவில்பட்டி லெனின்நகர்  கற்பக விநாயகர் கோவில் கொடை விழா

கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு லெனின் நகரில் உள்ள கற்பக விநாயகர், முத்துமாரியம்மன், வீர கருப்பசாமி கோவில் 49-வது ஆண்டு கொடை விழா கடந்த 8-ந் தேதி  நாட்கால் நடுதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.’

இன்று காலை 6 மணி அளவில்  மங்கள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் , தீர்த்தகுடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோவில் வந்தடைந்தனர்.., பகல் 12 மணிக்கு மேல் அன்னதானம் நடைபெற்றது.

இரவு 8 மணிக்கு முத்துமணி சங்கர் குழுவினரின் வில்லிசை நிகழச்சி நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு  கற்பக விநாயகர், முத்துமாரியம்மன், வீரகருப்பசாமி பரிவார தெய்வங்களுக்கு சாம கொடை நடக்கிறது.

நாளை புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பொங்கலிடுதல், 7 மணிக்கு மாவிளக்கு பூஜை, மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *