அ. தி. மு. க.. மாநாட்டுக்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு இல்லை ; டி.ஜெயக்குமார் பேட்டி

வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான பிரசார வாகனத்தை சென்னை பழைய
வண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :-
இந்தியாவில் இதுவரை எந்த கட்சியும் நடத்தாத வகையில் வருகிற 20 ந் தேதி மதுரையில் அ. தி. மு. க. எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.
40க்கு 40 என்ற வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி
பெறும்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நடத்த எந்த தகுதியும் முகாந்திரமும்
தி.மு.க.விற்கு இல்லை.வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி
மாநாட்டை வெற்றிகரமாக நடைபெற்று விடும் என்ற பொறாமையில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மாநாடு வெற்றி கரமாக நடைபெற்று முடிய போகிறது
நீட் தேர்வுக்கு எதிராக அப்போது போராடாமல் இன்று போராடுவது என்ன என்பதை
பார்க்கும்போது தி.மு.க. வினர் சந்தர்ப்பவாதிகள் என்பது தமிழ்நாடு மக்களுக்கு நிச்சயம் தெரியும்.
தி.மு.க. ஆதரவோடு காங்கிரஸ் ஆட்சி இருந்த போது தான் நீட் தேர்வு மசோதாவை எடுத்து வந்தனர்
தி.மு.க.வினர் விளம்பர தட்டி வைத்தால் வழக்கு போடுவது இல்லை.
ஆனால் மாநாட்டுக்கு நாங்கள் பேனர் வைத்தால் வழக்கு போடுகிறார்கள்.
திமுக பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் அதிமுக விடம் எடுபடாது. கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு
செய்திகள் இடம் பெறக் கூடாது என்பதற்காக அன்றைய தினமே போராட்டத்தை
நடத்துகின்றனர்.
நீட் தேர்வுக்கு போராட தகுதி இல்லாதவர் உதயநிதி ஸ்டாலின். கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பது ஒரு விஷயம் இல்லை
திருநாவுக்கரசு கூறுவது முற்றிலும் பொய் அவருக்கு அடையாளம் காட்டியது யார்?
துணை சபாநாயகர் பதவி கொடுத்து அழகுப்பார்த்தது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.திருநாவுக்கரசின் அரசியல் வரலாற்றில் அடையாளம் காட்டியது அதிமுக தான்.
அதிமுகவின் வரலாற்றை கொண்டாடும் மாநாடு இது என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு
அழைப்பு இல்லை.முழுக்க முழுக்க அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற
கழகத்தின் மாநாடு. அதனால் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தேர்தல் நேரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் போது தான் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும்.
என்னை கேள்வி கேட்க உங்களுக்கு பாரம்பரியம் இருக்கிறதா? இதற்கு காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் பதில் அளிக்க வேண்டும்.
எங்களுகென்று பெரிய அரசியல் வரலாறு இருக்கிறது கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரை கடலில் காற்றாலை மின்சாரம் தயாரிக்க
30,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் போடப்பட்டுள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் நியாயமான கோரிக்கை வைக்கும் மீனவர்களை கைது செய்தது கண்டிக்க தக்கது
கன்னியாகுமரியில் இருந்து நாகபட்டினம் வரை கடலில் காற்றாலை அமைத்தால் மீனவர்கள் எப்படி தொழில் செய்ய முடியும் ராமநாதபுரத்தில் திமுக நடத்தும் போராட்டத்தில் மீனவர்கள் யாரும் பங்கேற்க வில்லை.
ஒரு புறம் கடலில் தலைவர்கள் சிலையும் காற்றாலையும் வைத்தால் மீனவர்கள் எப்படி தொழில் செய்ய முடியும்.
இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.
