பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளியம்மன், காளியம்மன் கோவில் ஆடி பொங்கல் விழாவில் கோலாட்டம் அடிக்கும் சிறுமியர் மற்றும் பெண்களுக்கு பரிசு, மற்றும் 1௦௦8 பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் என்ஜினீயர் ஜி.தவமணி தலைமை தாங்கினார். கோலாட்டம் ஆடிய சிறுமியர்களுக்கு கவுன்சிலர் லவராஜா பரிசுகள் வழங்கினார்.

1,௦௦8 பெண்களுக்கு மங்கள பொருட்களை கவுன்சிலர் ஜோஸ்மின் லூர்துமேரி, தி.மு.க.சிறுபான்மை பிரிவு வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் ஆகியோர் வழங்கினார்கள். ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை நிறுவன தலைவர் சீனிவாசன், அவரது மனைவி எஸ்.ஆனந்தவல்லி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
விழா ஏற்பாடுகளை வேலாயுதபுரம் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் முருகன் செய்திருந்தார்.
