திருமாவளவன் பிறந்தநாள் : அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு ரொட்டி, பழங்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சு முருகன் தலைமையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மற்றும் உள் நோயாளிகளுக்கு ரொட்டி, பழங்கள், கடலை மிட்டாய் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் பெஞ்சமின்பிராங்க்ளின், முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபாவளவன், கோவில்பட்டி நகரச் செயளாலர் கருப்பசாமி, ஒன்றிய செயலாளர் மாடசாமி, கயத்தாறு ஒன்றிய செயலாளர் காளிராஜ்,
நகரச் செயலாளர். மணிகண்ட பூபதி,
மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்டர் மோகன்,செய்தி தொடர்பாளர் மனுவேல், ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
