Month: June 2023

செய்திகள்

இளநிலை மருத்துவப் படிப்பில் பொது கவுன்சிலிங்: மத்திய அரசின் அறிவிப்புக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு

அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள்; இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களைக் கொண்ட மாநிலம் தமிழ் நாடு. 2011-ல் விடியா தி.மு.க. ஆட்சியில் 1,945 ஆக இருந்த எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்கள், 2021-ல் அம்மாவின் ஆட்சியில் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களையும் சேர்த்து சுமார் 12,500-க்கும் மேலாக அதிகரிக்கப்பட்டது சாதனையாகும். அம்மாவின் அரசு ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவக் […]

செய்திகள்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டனக்குரல்

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்  முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்” என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி நகரில் சீரான குடிநீர் வினியோகம்; நகரசபை தலைவர் பேட்டி

கோவில்பட்டி நகரசபை தலைவர் கா.கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவில்பட்டி நகராட்சியில் வார்டு எண்.20, 22 ஆகிய பகுதிகளில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2-வது குடிநீர் குழாய் பதிக்காமல் விட்டுவிட்டனர். ஆனாலும், அந்த வார்டுகளில் பழைய குடிநீர் குழாய்களின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பகுதியில் உள்ள 8 வீடுகளுக்கு மட்டும் குடிநீர் வராமல் இருப்பதாக புகார் வந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அந்த 8 […]

கோவில்பட்டி

ஓவர்சியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இளையரசனேந்தல் பஞ்சாயத்தில் ஊரக வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அவதூறாக பேசிவரும் ஓவர்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இளையரச னேந்தல் கிளைதலைவர் பாண்டியன், தேசிய விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் […]

சிறுகதை

அஞ்சி கொய்யாப்பழம்… (சிறுகதை)

அழகேசன்…அழகானவர். ஆனால் கொஞ்சம் கடுமையானவர். தான்பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்பார். அவரது மனைவி ரஞ்சிதம்.அமைதியானவர்.கணவன் சொல்லை மீறமாட்டார்.அவரை கண்டாலே அவருக்கு ஒரு பயம். கணவர் சத்தம் போட்டு பேசினால் நடுங்கிப்போவார். அன்று காலை அழகேசன் மார்க்கெட்டுக்குப் போனார்.ஒரு கூடையில் காய்கறிகள் வாங்கிவந்தார்.அதே கூடையில் பத்து கொய்யாப்பழங்களையும் வாங்கிப்போட்டிருந்தார்.அந்த பழங்கள் நன்றாக பழுத்திருந்தன. மார்க்கெட்டுக்கு சென்றுவந்த அழகேசன் தன் மனைவியிடம் காய்கறி கூடையை கொடுத்தார்.காய்கறிகளை கூடையிலிருந்து தனியே எடுத்துவை என்றார். ரஞ்சிதம் அவர் சொன்னபடி காய்கறிகளை தனியே எடுத்து […]

செய்திகள்

அண்ணாமலைக்கு டி.ஜெயக்குமார் கடும் கண்டனம்; “கூட்டணியை முறிக்கும் செயலில் ஈடுபடுகிறார்”

சென்னை பட்டினபாக்கத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டி வருமாறு:- மறைந்த தலைவர்,இன்றைக்கும் உலகம் முழுவதும் உள்ள 10 கோடிக்கு மேற்பட்ட தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கின்றவர் எங்கள் இதயதெய்வம் அம்மா ஜெயலலிதா. அம்மா என்று சொல்லும்போது  எல்லா சாலைகளும் போயஸ்கார்டன் என்ற வகையிலே அவர்களை முன்னாள் பிரதமர்கள் ,இந்நாள் பிரதமர்கள்,மூத்த பாஜக தலைவர்கள்,தனது  இல்லத்திலே சந்தித்து வந்துள்ளார். உலக தலைவர் என்று இன்றைக்கும் அவரின் புகழ் மலையளவு  இருந்துகொண்டுள்ளது. ஆனால் இந்த […]

கோவில்பட்டி

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்திடவும்,குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நாடு முழுவதும் ஜூன் 12-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கோவில்பட்டி வட்டார நூலகத்தில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் இன்று (ஜூன் 12) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த இந்நிகழ்ச்சிக்கு பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் தலைமை தாங்கினார்,.கோவில்பட்டி வட்டார நூலகர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் அறிவித்த அமைப்பினருடன் சமாதான பேச்சு

மாவீரன் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பாக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும், பிரசவ வார்டில் தேவையான குடிநீர், சுடுநீர், மற்றும் கழிப்பறை வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவத்துறை இயக்குனர் தலைமையில் போராட்டக் குழுவினருடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.. பேச்சுவார்த்தையில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் இணை […]

கோவில்பட்டி

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு ; 6-12 ம் வகுப்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணர்களுக்கு ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி 2 முறை தள்ளிவைக்கப்பட்டு இறுதியில் இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பள்ளிகள் திறக்கப்பட்டன. 6-ம் வகுப்பு முதல் 12 வரையிலான மாணவ, மாணவிகள் […]

கோவில்பட்டி

ஜூனியர் ஆண்கள் தேசிய ஆக்கி: முதல் நாளில் புதுவையை வீழ்த்தியது தமிழ்நாடு; கோவில்பட்டி

ஒடிசா மாநிலம் ரூர்கேலா நகரில் ஜூனியர் ஆண்கள் தேசிய ஆக்கி போட்டி இன்று(திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த போட்டியில் தமிழக அணி கலந்து கொண்டு விளையாடுகிறது. இதற்காக தமிழக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி மேலாளர் ஜெய்கணேஷ் அடங்கிய குழுவினர் ரூர்கேலா சென்றுள்ளனர்.போட்டியின் தொடக்க நாளில் நடந்த ஒரு போட்டியில் தமிழகம்-புதுச்சேரி அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி வீரர்களின் அசத்தல் ஆட்டத்துக்கு புதுச்சேரி அணி வீரர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் 6-1 என்ற […]