• May 15, 2025

கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் அறிவித்த அமைப்பினருடன் சமாதான பேச்சு

 கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் அறிவித்த அமைப்பினருடன் சமாதான பேச்சு

மாவீரன் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை சார்பாக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும், பிரசவ வார்டில் தேவையான குடிநீர், சுடுநீர், மற்றும் கழிப்பறை வசதி செய்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதென அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவத்துறை இயக்குனர் தலைமையில் போராட்டக் குழுவினருடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது..

பேச்சுவார்த்தையில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் கற்பகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அகத்தியன், தலைமையிடத்து அதிகாரி மருத்துவர் பாலகிருஷ்ணன், மருத்துவர் ஶ்ரீ வெங்கடேஷ், தலைமை செவிலியர் மற்றும் மாவீரன் பகத்சிங் ரத்ததான அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பெஞ்சமின் பிராங்ளின், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் செல்வம் என்ற செல்லத்துரை, நாம் தமிழர் கட்சியின் தொகுதிச்செயலர் வழக்கறிஞர் ரவிக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி அருமைராஜ், முக்குலத்தோர் புலிப்படை துணைப் பொதுச்செயலாளர் பெருமாள், முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ரத்ததானக் கழக நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் வாக்குறுதி அளித்ததன் பேரில் ஆர்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *