• June 7, 2025

Month: May 2023

செய்திகள்

கள்ளசாராய சாவு : மு. க. ஸ்டாலின், செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய

கடலில் பேனா மற்றும் கடலில் காற்றாலை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ராயபுரம் புனித சேவியர் தெரு பகுதியில் மீனவர்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். கடல்சார் மக்கள் நல சங்கம் மற்றும் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இந்த கையெழுத்து இயக்கத்ததில் தமிழ்நாடு முழுவதும் சென்று ஒரு லட்சம் மீனவர்கள் இடம் கையெழுத்து பெற்று ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளனர். […]

கோவில்பட்டி

கர்நாடக தேர்தல் வெற்றி : கோவில்பட்டியில் காங்கிரசார் கொண்டாட்டம்

கோவில்பட்டியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. sc/st மாநில துணை தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார் கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், பி. எஸ். என். எல் .துரைராஜ் மாவட்ட செயலாளர், sc/st பிரிவு மாவட்ட தலைவர் கண்ணாயிரம் ஆகியோர் முன்னிலையில் டாக்டர் மாறன் மருத்துவ அணி மாவட்ட தலைவர், காங்கிரஸ் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பொது மருத்துவம், கண் பரிசோதனை முகாம்

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், கோவில்பட்டி எவரெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடந்தது.பொதுநல மருத்துவமனை, நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாமை நடத்தின.பொதுநல மருத்துவமனை தலைவர் டி.கே.டி. திலகரத்தினம் தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் மற்றும் செயலாளர் ஆர்.ஏ.அய்யனார், மருத்துவமனை செயலாளர் எம்.தங்கராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். முகாமை நகர தி.மு.க. […]

கோவில்பட்டி

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,ரோட்டரி கிளப் ஆப் கோவில்பட்டி, ஜே.சி.ஐ சார்பில் புத்தக கண்காட்சி துவக்க விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. புத்தக கண்காட்சியில் இலக்கியம்,வரலாறு,நாவல், சட்டம்,மருத்துவம், அறிவியல், அரசியல்,போட்டித் தேர்வு நூல்கள், உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.புத்தக கண்காட்சி மே 30ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.அனைத்து புத்தகங்களுக்கும் 10% சிறப்பு தள்ளுபடி உண்டு.புத்தக […]

கோவில்பட்டி

பங்காரு அடிகளார் பிறந்தநாள் : கோவில்பட்டியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் 83வது அவதார விழா கோவில்பட்டி ஜெயஸ்ரீ திருமண மண்டபத்தில் நடைபெற்றது. குரு பூஜை, விநாயகர் பூஜை, சக்தி பூஜையுடன், நடைபெற்ற சிறப்பு கூட்டு வழிபாட்டில் மகளிர் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாவட்ட துணைத் தலைவர் பண்டார முருகன் ஓம் சக்தி கொடியை  ஏற்றி வைத்தார். பேராசிரியர் இந்திராகாந்தி வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பாரதி, அடிகளார் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு; 12 பள்ளி வாகனங்களில் குறைகள் கண்டுபிடிப்பு  

தமிழ்நாடு அரசு ஆணையின்படி ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களை மாவட்ட அளவிலான குழுவினர் ஆய்வு செய்யவேண்டும். அதன்படி இன்று காலை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தபட்டது. கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்போது 79 பள்ளிகளை சேர்ந்த 265 வாகனங்கள் உள்ளன. அவற்றில் இன்று 199 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்ட 12 வாகனங்களுக்கு குறைகளை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வில் தகுதியாக இருந்த 187 […]

செய்திகள்

கவர்னர் வருகை: கொடைக்கானல் செல்லும் பாதையில் மாற்றம்

மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானல் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடை விடுமுறை என்பதால் கொடைக்கானல் களை கட்டி இருக்கிறது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை  14ம் தேதி கொடைக்கானல்  வருகிறார். 2 நாட்கள் தங்கி இருக்கும் அவர் 16-ந்தேதி அங்கிருந்து புறப்படுகிறார். இதனால்  கொடைக்கானலுக்கு செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  14ஆம் தேதி மதியம் 2 மணி  முதல் 4.30 மணி வரை மற்றும் 16ம் […]

தூத்துக்குடி

கண்மாய் தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் மகேஷ்குமார் (வயது 11). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவரும். இவரது தம்பி அருண்குமார் (7), அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் சுதன் (7) ஆகியோர் அங்குள்ள கண்மாய் பகுதியில் விளையாட சென்றனர். இவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடினர்.   கண்மாய் கரையோரம் சைக்கிள் நிற்பதை பார்த்த சிலர், உடனடியாக ஊருக்குள் தகவல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா: திருவிளக்கு பூஜையுடன் நிறைவு

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கபப்ட்டு தினமும் மண்டகப்படிதாரர் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.; கோவில் முன்புறம் உள்ள கலையரங்கம் மற்றும் அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் இரவில்  கலைநிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெற்றன. மேலும் ஒவ்வொரு நாள் இரவும் அம்மன் விதிஉலா நடந்து வந்தது, வெவ்வேறு வாகனங்களில் விதவிதமான் அலங்காரத்தில் எழுந்தருளி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் துணிகரம்: ஒரே நாள் இரவில் 3 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம்

கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலையில் மேட்டு காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா 8 நாட்கள் நடந்து 2 நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது.நேற்று இரவு 8:30 மணிக்கு பூஜைகளை முடித்து கோயில் நடையை அடைத்துவிட்டு பூசாரி வீட்டுக்கு சென்றார். இன்று அதிகாலை கோயிலுக்கு வந்த போது கோயிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி, உடனடியாக கோவில்பட்டி மேற்கு […]