• June 8, 2025

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்

 கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் புத்தக கண்காட்சி தொடக்கம்

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,ரோட்டரி கிளப் ஆப் கோவில்பட்டி, ஜே.சி.ஐ சார்பில் புத்தக கண்காட்சி துவக்க விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தக கண்காட்சியில் இலக்கியம்,வரலாறு,நாவல், சட்டம்,மருத்துவம், அறிவியல், அரசியல்,போட்டித் தேர்வு நூல்கள், உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
புத்தக கண்காட்சி மே 30ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.
அனைத்து புத்தகங்களுக்கும் 10% சிறப்பு தள்ளுபடி உண்டு.
புத்தக கண்காட்சி தொடக்க விழாவிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார் .
திருவள்ளுவர் மன்ற துணைத் தலைவர் திருமலை முத்துசாமி,பணி நிறைவு பெற்ற தாய்கோ வங்கி மேலாளர் ராமசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கசெயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள் புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு முதல் விற்பனையை தொடக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மணிகண்ட மூர்த்தி, பூல்பாண்டி, முத்து முருகன் தமிழ்நாடுபுத்தக விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் ராஜபாண்டி, சண்முகம், சீனிவாசன்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *