கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா: திருவிளக்கு பூஜையுடன் நிறைவு

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதை தொடர்ந்து தினமும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கபப்ட்டு தினமும் மண்டகப்படிதாரர் சார்பில் நிகழ்ச்சிகள் நடந்து வந்தன.; கோவில் முன்புறம் உள்ள கலையரங்கம் மற்றும் அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் இரவில் கலைநிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெற்றன.
மேலும் ஒவ்வொரு நாள் இரவும் அம்மன் விதிஉலா நடந்து வந்தது, வெவ்வேறு வாகனங்களில் விதவிதமான் அலங்காரத்தில் எழுந்தருளி மக்களுக்கு அருள் பாலித்தார்.

திருவிழாவின் 10-ம நாளில் பொங்கலிடுதல் , மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. மேலும் முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. மறுநாள் 11-ந்தேதி கோவில் முன்புறம் உள்ள கலையரங்கத்தில் வில்லிசை நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் நேற்று கோவிலில் பிரமாண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.1008 பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். கோவில் உள்புறம் ஆங்காங்கே அமர்ந்து திருவிளக்கு பூஜை நடத்தினார்கள்.“
இந்த பூஜையுடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.
