கவர்னர் வருகை: கொடைக்கானல் செல்லும் பாதையில் மாற்றம்

மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானல் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. சீசன் சமயங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது கோடை விடுமுறை என்பதால் கொடைக்கானல் களை கட்டி இருக்கிறது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை 14ம் தேதி கொடைக்கானல் வருகிறார். 2 நாட்கள் தங்கி இருக்கும் அவர் 16-ந்தேதி அங்கிருந்து புறப்படுகிறார். இதனால் கொடைக்கானலுக்கு செல்லும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
14ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை மற்றும் 16ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வத்தலகுண்டு – கொடைக்கானல் ரோடு வழியாக கொடைக்கானல் செல்வதற்கும் கொடைக்கானலில் இருந்து கீழே இறங்குவதற்கும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக அனைத்து வாகனங்களும் பழனி – பெருமாள் மலை வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
